தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகத் தேர்வு ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இம்முறை 2016 மற்றும் 2017 க.பொ.த (உயர்தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜுன் மாதம் மூன்றாம் வாரம் ஆரம்பமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 

Post a Comment

Previous Post Next Post